articles

img

அமானுல்லா கான் மக்களுடன் உரையாடுவோம்! அரசியல் கடமை ஆற்றுவோம்!

மிகப்பெருமளவில் அதிகரித்துள்ள வேலை யின்மை, விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் சமத்துவமின்மை, ஒற்றைப் பண்பாடு  திணிப்பு மற்றும் பிரிவினை ஆகியன இந்திய சமூகம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகளாகும்.

இந்தியா 2047ஆம் ஆண்டில் முற்றிலும் வளர்ச்சி யடைந்த நாடாக மாறும் என அரசு இலக்கினை நிர்ணயித்துள்ளது. அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இந்த இலக்கை அடைவது மிகவும் கடினம் என்பது அனைவரும் அறிந்ததே.

பொருளாதாரம் பதிவு செய்யும் எத்தகைய வளர்ச்சியும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதில்லை என்பது தற்போது தெளிவாகி உள்ளது.  பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் தின் அதிகரித்த பயன்பாடு வேலைவாய்ப்புகளை உரு வாக்குவதை விட, ஏற்கனவே உள்ள வேலைகளை அழிப்பதாகவே உள்ளது. 

தீவிர வேலையின்மை

இளைஞர்களிடையே வேலையின்மை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது மிகவும் அபாயகரமானது. தீவிரமாக வேலை தேடும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் கால் பகுதியினருக்கு வேலை கிடைப்பதில்லை.

இவ்வளவு வேலையற்ற இளைஞர்களின் அதீத எண்ணிக்கை, ‘இந்தியா மக்கள் தொகை பெருக்கத்தால் நன்மைகளை கொண்டுள்ளது’ என்ற புகழை இழந்து விட்டதை வெளிப்படுத்துகிறது. தனி யார் துறை, இத்தனை அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தகுதியற்றது, அல்லது உடன்படாது என்பதையே அனுபவம் தெரிவிக்கிறது. எனவே வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டு மன்றி, அத்தகைய வேலைகள் தொழிலாளர்களுக்கு கண்ணியமான ஊதியத்தை வழங்குவதை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

ஆனால் அதற்கான ஆளுமைத் திறனும், அரசியல் உறுதியும் இங்கு இல்லை. அரசு தனது சொந்த துறைகளில் தற்போதுள்ள பெரும் எண்ணிக்கை யிலான காலிப்பணியிடங்களை நிரப்பத் தயாராக இல்லை. பொதுத்துறை நிறுவனங்களின் காலிப்பணி யிடங்களை நிரப்பவும் அனுமதிப்பதில்லை. 

ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியின் நிரந்தர வேலை வாய்ப்பு எங்கும் இருக்கக்கூடாது என்னும் கருத்தினை அடியொற்றியே அரசாங்கம் செயல்படுகிறது. எனவே தான் ஒப்பந்த அடிப்படையிலான பணிநிய மனம் மற்றும் பணிகளை அவுட்சோர்சிங் செய்வது தீவிரமடைகிறது.

அரிக்கப்படும் உண்மை ஊதியம்

இரண்டாவது முக்கிய பிரச்சனை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதாகும். விலைவாசி உயர்வு ஏழைகளின் மீது கடுமையான தாக்குதல்களை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஊதி யத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தேக்க நிலை உள்ள போது, அதிக விலையின் காரணமாக, தொழி லாளர்களின் உண்மையான ஊதியம் அரிக்கப்படு கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த 7-8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50%  அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழை களின் மொத்தச் செலவுகளில் கணிசமான பகுதி உணவுப் பொருட்களுக்கான செலவினமாகவே உள்ளது. எனவே அவர்கள் நுகர்வை வெட்டி சுருக்கிக் கொள்ள கட்டாயப்படுத்துவதுடன், பெரும்பாலா னோர் மீண்டும் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய பணவீக்க விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பினைத் தாண்டிச் சென்று விட்டது. இருப்பினும் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்நிலையை துய ரத்திற்கு உள்ளாக்கும் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் துணியாமல், ரிசர்வ் வங்கி வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை சமன் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

வறுமையின் பல பரிமாணங்கள்

முன்னெப்போதும் இல்லாத வகையில், வருவாய் மற்றும் சொத்துக்களில் அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுகள் கவலையளிக்கக்கூடிய ஒன்றாகும். இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதுடன் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். ஐக்கிய நாடு கள் வளர்ச்சித் திட்டம் கிட்டத்தட்ட கால்வாசி இந்தி யர்கள் ‘பல பரிமாண வறுமையின் தாக்கத்திற்கு உள்ளாகி துன்பமடைவதாக’ வகைப்படுத்தியுள்ளது. 

நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானத்துடன் ஏழைகள் போராடி வருகிறார்கள். உடல்நலம், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் அடிப்படையிலான பல பரிமாண வறுமை, வருமான அடிப்படையிலான வறுமையை விட கூடுதல் அபாயங்களை கொண்டது.  

மடைமாற்றப்படும் செல்வம்

இந்தியாவில் சொத்து பகிர்வு செல்வந்தர்களுக்கு ஆதரவாக மடைமாற்றம் செய்யப்படுகிறது. ஆக்ஸ்பாம் மதிப்பீட்டின்படி, உருவாக்கப்படும் சொத்துக்களில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு நாட்டின் 1% செல்வந்தர்களிடம் குவிந்துள்ளது. அதே வேளையில் அடிமட்டத்திலுள்ள 50% மக்களின் சொத்து 1% மட்டுமே உயர்ந்துள்ளது. நாட்டில் உருவாக்கப்படும் சொத்து பகிர்மானம் நேர்மையுடன் நடைபெறுவதை கண்காணிக்க அரசு தயாராக இல்லை. ‘அரசு சொத்துக்களை உருவாக்குவதில் மட்டுமே உதவ முடியும், மறுபங்கீடு அதன் பொறுப்பல்ல’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது நவீன  தாராளமய பொருளாதாரக் கொள்கை. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைவான வரி விகிதத்தை கொண்டிருப்பதிலும், மறைமுக வரிவிகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசு அதீத வருமானத்தை ஈட்டுவதிலும்  பிரதிபலிக்கிறது. 

இன்று கூட்டுக்களவு முதலாளித்துவம் மற்றும் பரம்பரை சொத்து வாரிசுரிமையினால் செல்வந்தர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகின்றனர் என்பதை கூறத் தேவையில்லை. தற்போதைய அரசிடமிருந்து கூட்டுக்களவு முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் தொடுப்பதையும், பரம்பரை சொத்துக்களின் மீது சிறிய அளவிலாவது வரி விதிப்பையும் எதிர்பார்ப்பது அதீதமாகும்.

சிறுபான்மையினரைத் தவிர்த்து முன்னேற முடியுமா?

இந்திய சமூகம் தற்போது தார்மீக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. வன்முறையையும், வெறுப்பையும் பரப்புவதற்கு மதம் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. சமூகங்களிடையே அவநம்பிக்கை விதைகள் விதைக்கப்படுகின்றன. வளமான வேறுபாடுகள், கலாச்சார, மதம் மற்றும் மொழியியல் பன்மைத்துவம் தாக்கப்படுகின்றது. ஒற்றைத் தன்மையை திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மதம், மொழி, சாதி மோதல்களை உருவாக்குகிறது. 

தில்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர், “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்ற முழக்கத்தை உருவாக்கினார். இந்தியா ஒரே குடும்பமாக கருதப்பட்டால், சிறுபான்மையினர் ஏன் வேறுபடுத்தப்படுகின்றனர்? இந்தியாவின் 20% மத சிறு பான்மையினர் ஏன் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள்? உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து பேசப்படும் அதே நேரத்தில், சிறுபான்மையினரை, குறிப்பாக, இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக  புறக்கணிக்கும் அழைப்புகளும் ஏன் விடுக்கப்படு கின்றன? நாட்டின் வளர்ச்சிக்கான ‘திட்டங்களில் சிறு பான்மையினரை தவிர்த்து, இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறுவது சாத்தியமா? சமூகத்தில் அமைதியும் நல்லிணக்கமும் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமா? இவையெல்லாம் இந்திய சமூகம் பதி லளிக்க வேண்டிய முக்கியமான வினாக்களாகும்.

பொருளாதாரம் வளர்கிறதா?

இந்தியா இன்று உலகின் பெரிய பொரு ளாதாரங்களில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும்  பொருளாதாரம் என்று அரசு கூறிக் கொள்ளலாம். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, 5 வது பெரிய பொருளாதாரமாக திகழ்வதை உணர்ந்து கொள்ள முடியும் என்பது உண்மையே. 3.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தினால் ஏழை கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் எவ்விதம் பய னடைந்துள்ளனர் என்பதே கேள்வி. வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதா என்ற கேள்வியை ஏழைகளிடம் எழுப்பினால், அதற்கான விடை நிச்சயமாக, எந்த  மாற்றமும் இல்லை என்பதாகவோ, அல்லது வாழ்க்கைத்தரம் மோசமடைந்துள்ளது என்னும் குற்றச் சாட்டாகவோ தான் இருக்கும். நியாயமான சொத்து  மறுபங்கீடு இல்லாத போது நிலைமை இவ்வாறு  தான் இருக்கும்.  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனி நபர் வருமான விகிதத்தில் இந்தியா மிகக்கீழான, 139வது  இடத்தில் இருப்பது இதன் பிரதிபலிப்பே. 

இந்தியா மனித வளம், வறுமை மற்றும் பசி குறியீட்டில் மிகவும் கீழிறங்கியுள்ளது. எனவே, அரசு  வாய்ச்சவடால்களை விடுத்து இந்திய சமூகத்தை  தீவிரமாகப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனை களை எதிர்கொள்ள முன்வரவேண்டும். இந்தியா  முழு வளர்ச்சியடைந்த நாடாக உருவாக, வன்முறை யையும், வெறுப்பையும் பரப்பும் சக்திகள் உறுதியாக கட்டுப்படுத்தப்பட்டு அமைதியும், நல்லிணக்கமும் மலர்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை ஆகிய முக்கிய பிரச்ச னைகளை களைவதில் கவனம் செலுத்த வேண்டும். 

இந்த பிரச்சனைகள் குறித்து மக்களிடையே விவாதத்திற்கு உட்படுத்தும் வகையிலான அரசியல் கடமையை நிறைவேற்ற சமூகத்தின் அனைத்து முற்போக்கு சக்திகளையும் இணைத்துக்கொண்டு, முன்னணிப் படையாக செயல்பட வேண்டியது  உழைப்பாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் முதன்மையான கடமையாகும். 

 கட்டுரையாளர்: இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மூத்த தலைவர்    - தமிழில் : சுதா